
இந்த செய்தியை பார்த்தவுடன் ஒரு கணம் அப்படியே ஆடி போய்விட்டேன். ஒரு கைக்குழந்தையின் மேல் ஒரு ஆசாமி நின்று கொண்டிருக்கிறார். இந்த கொடுமை நடந்தது பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் என்ற ஊரில். அந்த ஊரில் உள்ள ஒரு சாமியார் தன்னிடம் அபார சக்தி இருப்பதாகவும் அதன் மூலம் எல்லா வியாதிகளையும் குணப்படுத்துவேன் என்று அப்பாவி மக்களை ஏமாற்றி வந்துள்ளான். அந்த கிராம மக்களும் அந்த சாமியாருக்கு சக்தி இருப்பதாகவும் அந்த சக்தி அவன் கால்கள் மூலமாக வெளிப்படுவதாக நம்புகிறார்கள்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெற்ற பீகார் மாநில சுகாதார துறை அமைச்சர் இந்த பிரச்சனையில் கலாச்சாரமும் (இது என்ன கலாச்சாரமோ?) மதமும் சம்பந்த பட்டிருப்பதால் இந்த சாமியார் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இதை விட கொடுமை கதிஹார் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நிகில் சௌதிரி (பி.ஜே.பி) இப்படி கூறியிருக்கிறார் ”இந்த சடங்கினால் மக்கள் பலன் அடைவார்களே ஆனால், இது அவர்களின் உரிமை, அதை யாரும் தடுக்க முடியாது.” அது மட்டும் இல்லாமல் எந்த விதமான தயக்கமும் இன்றி இந்த காட்டுமிராண்டி தனத்தை நியாப்படுத்தி உள்ளார். இவர் மட்டும் அல்லாமல் அதே தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்குபெற்ற காசி சுமேரு மடத்தின் தலைவர் சங்கராச்சரிய சுவாமியும் அவருக்கு ஒத்து ஊதியுள்ளார். சனல் எடமரக்கு அவர்கள் அவரிடம் இந்த காட்டுமிராண்டி தனத்தை தடுத்து நிறுத்துமாறு அந்த நிகழ்ச்சியில் வலியுறுத்தியுள்ளார்.
இந்த காட்டுமிராண்டி தனம் ஒளிபரப்பான 24 மணி நேரத்திற்குள் அந்த காட்டுமிராண்டி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்