Loading...

Friday, March 5, 2010

உன் கண்ணில் கண்ணீராக


உன் கண்ணில்
ஒரு துளி கண்ணீராக
நான் இருந்தால்
உன் கன்னம் தழுவி
உன் உதட்டை
சென்று அடைந்திருப்பேன்
என் கண்ணில்
கண்ணீராக நீ இருந்தால்
நான் என்றும் அழ மாட்டேன்
என் கண்ணில் இருந்து உன்னை
கீழே விழ விடமாட்டேன்

உன் சுவாசக் காற்றாய்
நான் இருந்தால்
உன் சுவாசமாக
உன் உள்ளே என்றும்
உன்னுடன் கலந்திருப்பேன்
என் சுவாசக் காற்றாய்
நீ இருந்தால்
உள் இழுத்த மூச்சை
வெள்ளியில் விட மாட்டேன்
வெளியே விட்டு
உன்னை தொலைக்க மாட்டேன்

No comments:

Post a Comment